ஹாலந்துக்கு 10,000 சாப்ட்வேர் நிபுணர்கள் தேவை
கோயம்புத்தூர்:
ஹாலந்து (நெதர்லாந்து) நாட்டுக்கு 10,000 சாப்ட்வேர் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்தத் தேவையை இந்தியா தான் பூர்த்தி செய்ய முடியும் என அந் நாட்டுத் தூதர் நுனன்பெர்க் கூறினர்.
கோயம்புத்தூரில் சி.ஐ.ஐ. ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் ஹாலந்திலும்கிளைகளைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் ஐரோப்பிய சந்தையை பிடிக்க முடியும்.
இப்போது ஹாலந்தில் சுமார் 5,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். ஹாலந்தில் தொழில் தொடங்க இந்தியர்கள் அதிக அளவில் முன்வர வேண்டும்.
இந்தியாவிலிருந்து ஹாலந்து ரூ. 3,850 கோடிக்கு பொருள்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா எங்களிடமிருந்து ரூ. 1,950கோடிக்குத் தான் பொருள்களை வாங்கியுள்ளது. இது எங்கள் ஏற்றுமதியில் வெறும் 4 சதவீதம் தான்.
இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் ரசாயனப் பொருள்களை நாங்கள் இறக்குமதி செய்கிறோம்.
இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் வர்த்த உறவை மேம்படுத்த தாய்லாந்துவிரும்புகிறது என்றார்.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 13,367 கோடியை ஹாலந்து முதலீடு செய்திள்ளது. இது விரைவில் இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.