வீட்டின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 4 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கிரானைடு வெடிகுண்டு வீசி புலிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 4 பேர்கொல்லப்பட்டனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், 20க்கும் மேற்பட்ட புலிகள் வீடு ஒன்றில் கிரானைடு வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல்நடத்தினர்.
இத்தாக்குதலில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தலைநகர் கொழும்பிலிருந்து 200கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேலிகன்டா பகுதியில் இத்தாக்குதல் நடந்தது என்றார்.
போலீஸார் தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். புலிகள் பக்கத்திலுள்ள ராணுவ முகாமைத் தகர்க்கத்திட்டமிட்டிருக்கலாம். ஆனால் தவறுதலாக வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தி விட்டனர் என்று கருதுவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, இலங்கையில் 17 ஆண்டுகளாக நடந்து வரும் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைநடத்தத் தயார் என்று புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளதையடுத்து தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
முன்னதாக, புதன்கிழமை பயணிகள் சென்ற பஸ் கண்ணிவெடியில் சிக்கியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications