For Daily Alerts
Just In
கோவையிலிருந்து திருப்பதிக்கு புதிய ரயில்
கோவை:
கோவையிலிருந்து திருப்பதிக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய ரயிலை இயக்குகிறது.
இந்த ரயில் வரும் 16ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை இயங்கும் இந்த ரயில், சனிக்கிழமையன்று புறப்பட்டுஞாயிறுக்கிழமை காலை திருப்பதியை அடையும்.
இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, ரேணிகுண்டா வழியாக ஞாயிறு காலை 10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.அங்கிருந்து ஞாயிறு இரவு 10 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு கோவை வந்தடையும்.
பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து இந்த ரயிலைத் தொடர்ந்து இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும். இந்தரயிலில் ஏசி பெட்டியும் உண்டு.
Comments
Story first published: Sunday, May 7, 2000, 5:30 [IST]