இந்தியாவில் அதிக உற்பத்தியால் குவிந்து கிடக்கிறது கோதுமை: சர்வதேச சந்தையில் விற்கத் திட்டம்
டெல்லி:
தன்னிடம் அதிகப்படியாக தேங்கிப் போயுள்ள 2 மில்லியன் டன் கோதுமையை இந்தியா சர்வதேச சந்தையில் விற்கத்திட்டமிட்டுள்ளது.
அதிக உற்பத்தி காரணமாக இந்தியாவில் கோதுமை தேங்கியுள்ளது. இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்யப் போகிறது என்றசெய்தி வெளியான உடனேயே சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை குறைந்துபோய் விட்டது.
இதனால் இப்போது ஒரு டன் கோதுமையை வெறும் ரூ. 4,250க்குத் தான் விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தவிலைக்குத் தான் ரேசன் கடைகளுக்கே அரசு கோதுமையை விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மார்ச்-ஏப்ரலில் மீண்டும் கோதுமை அறுவடை தொடங்கிவிடும். அதற்குள் இந்த கோதுமையை ஏற்றுமதி செய்தாகவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக 24.3 மில்லியன் டன் கோதுமையைத் தான் இந்தியா கையிருப்பில்வைத்திருக்கும். ஆனால், இப்போது 45 மில்லியன் டன் கோதுமை கையிருப்பில் வைத்துக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு சந்தையில் இந்திய கோதுமையை விற்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கோதுமையின்விலை டன் 140 முதல் 150 டாலர் தான். ஆனால், இந்திய கோதுமையின் விலை 160 டாலராக உள்ளது.












Click it and Unblock the Notifications