கள்ளச் சாரயம் விற்றதை தட்டிக் கேட்ட 2 பெண்கள் படுகொலை
சென்னை:
திருவள்ளூர் அருகே கள்ளச்சாரயம் விற்பதை தடுத்த இரண்டு பெண்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஏழுபேர்காயமடைந்தனர்.
திருவள்ளூர் அருகே பீமன் தோப்பு என்ற காலனி உள்ளது. அந்த காலணியைச்சேர்ந்தவர் யசோதா. இவர் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்.அருகில் உள்ள கொரட்டூர் தண்டலம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவனும் மேலும் சிலரும் சாராயம் காய்ச்சி விற்று வந்ததாககூறப்படுகிறது.
கள்ளச் சாராயத்தைக் குடித்த கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாதர் சங்கத்தைச்சேர்ந்த யசோதாவும் மற்றும்சிலரும் நேற்று நாகராஜனைச் சந்தித்து கள்ளச் சாரயம் விற்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, நாகராஜன் தன்னுடைய சொந்த ஊரான கொரட்டூர் தண்டத்துக்கு சென்று அடியாட்களை அழைத்துக்கொண்டு திரும்பிவந்திருக்கிறார். மாதர் சங்கதலைவி யசோதாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
எங்களை சாராயம் விற்காமல் தடுப்பதற்கு நீ யார்? என்று கோபத்தோடு பேசியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையேவாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. நாகராஜன் கும்பல் யசோதாவையும் அவருடைய குடும்பத்தினரையும் சரமாரியாகதாக்கியது.
இதில் யசோதாவின் சகோதரி ரத்தினம்மாள் வயது 50, யசோதாவின் மகள் இந்திராணி வயது 20 ஆகியோர் அதே இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்கள். கொலைக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தாக்குதலல் ரத்தினம்மாளின் கணவர் சாமிநாதன், மகன் புருஷோத்தமன் வயது 35, தனசேகர், குமார் ஏழுமலை, வீராச்சாமியின் மகன்ராமநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சாமிநாதன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இவர் தற்பொழுது சென்னை பொது மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும், மாவட்ட காவல்துறை அதிகாரி நல்லசிவம் அப்பகுதிக்கு போலீஸ் படையுடன் விரைந்து சென்றார்.கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. நாகராஜனையும் அவனது கூட்டாளிகளையும் போலீஸார்தேடிவருகின்றனர்.
போலீசாருக்குத் தெரியாமல் இந்த கள்ளச் சாராய கும்பல் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என அப் பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.இந்த கள்ளச் சாராய கும்பலுக்கு அரசியல் ஆதரவும் இருந்து வருவதாகத் தெரிகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications