புலிகளுடன் வீரப்பனுக்குத் தொடர்பில்லை: வைகோ
கோவை:
விடுதலைப் புலிகளுக்கும் வீரப்பனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருவரையும் ஒப்பிடுவது மிகவும் கேவலமான விஷயம் என கோவையில்வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ பேசியதாவது:
வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 130 அதிகாரிகளையும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகளையும்கொன்றவன் வீரப்பன்.
வனச் சொத்தை அழித்து தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அவனை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது மிகவும் அபத்தமான அவலமானசெயலாகும்.
விடுதலைப் புலிகள் தங்கள் இனப் பிரச்னைக்காக போராடி வருகின்றனர். அவர்களை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள தேவையான நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகின்றனர்.
வீரப்பனை வேட்டையாடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. தமிழகம் உட்பட எந்த மாநிலம் இந்தியாவின் அங்கம். இந்தியா ஒற்றுமைமிகுந்த நாடாக திகழ்ந்து வருகிறது.
இதில் எவ்வித மாற்றம் இல்லை. பிரிவினை வாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பது எனது கருத்து என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications