For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கொடூரமானவன் - நாகப்பா

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வீரப்பனுடன் காட்டில் இருந்த நாட்கள் கொடுமையானவை. அதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது என உதவி இயக்குனர் நாகப்பாதெரிவித்தார்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேர் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டனர். உதவி இயக்குனர் நாகப்பா 61 நாட்களுக்குப்பின் வீரப்பனிடமிருந்து தப்பி வந்து விட்டார். ராஜ்குமார் 108 நாட்களுக்கு பின்பே விடுவிக்கப்பட்டார்.

வீரப்பனிடமிருந்து தப்பி வந்த நாகப்பாவுக்கு பெங்களூரில் வியாழக்கிழமை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் சார்பில் பாராட்டு விழாநடத்தப்பட்டது.

இந்த விழாவிற்கு வேதிகே தலைவர் ஜானெகரே வெங்கட்ராமய்யா தலைமை தாங்கினார். வாட்டாள் நாகராஜ், நாகப்பாவுக்கு மைசூர் பேட்டாஅணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்த விழாவில் நாகப்பா பேசியதன் விவரம் வருமாறு:

இந்தக் கூட்டதில் கலந்து கொண்டுள்ள அனைவரையும் விட நான் சிறியவன். இது போன்ற பாராட்டு விழாக்களில் நான் கலந்து கொண்டதில்லை. எனக்குஎன்ன பேசுவது என தெரியவில்லை.

ஆனால் வீரப்பன் கொடியவன் அவன் அழிக்கப்பட வேண்டும். கன்னடர்கள் மிகவும் நல்லவர்கள். வேறு எதுவும் எனக்கு கூறத் தெரியவில்லை எனபேசி விட்டு அமர்ந்து விட்டார்.

கூட்டத்தினர் வீரப்பன் பற்றியும்,காட்டு வாழ்க்கை பற்றியும் பேசுங்கள் என கேட்டதற்கு, காட்டு வாழ்க்கை கொடிய வாழ்க்கை, வீரப்பன் மிகவும்கொடூரமானவன். காட்டு வாழ்க்கையை நினைத்தாவே பயமாக இருக்கிறது. மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டாம் என கூறினார்.

நாகப்பாவுக்கு பல்வேறு கன்னட சங்கங்கள் நிதி உதவி அளித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X