மருத்துவமனையில் ஜே.எச். படேல்
பெங்களூர்:
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல் லிவர் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஜே.எச். படேல் லிவர் பாதிப்பு மற்றும் முதுகு வலி காரணமாககஷ்டப்பட்டு வந்தார்.
புதன்கிழமை இரவு லிவர்பாதிப்பு அதிகமானதால் அவர் தனியார் மருத்துவமனையான மணிப்பாலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைபிரிவில் மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் படேலுக்கு சிகிச்சை அளிக்க சிற்கப்பூரிலிருந்து சிறப்பு மருத்துவ குழு பெங்களூர் வருகிறது. இவர்கள் படேலின் நோயின் தன்மை குறித்துபரிசோதித்து சிகிச்சை அளிக்கவுள்ளனர்.
முதல்வர் விரைந்தார்:
கர்நாடக முதல்வர் கிருஷ்ணா படேலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அமைச்சர்கள் மல்லிகாரஜுன கார்கே, தேஷ்பாண்டே, காகோடு திம்மப்பாஆகியோரும், அரசியல் பிரமுர்கள் பலரும் படேலை சந்தித்து உடல் நலம் விசாரித்தினர்.












Click it and Unblock the Notifications