சோனியாவை எச்சரிக்கும் மூத்த காங். தலைவர்கள்
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது முஸ்லீம்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தி விடும் என்று சோனியாகாந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அயோத்தியில் 1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது அயோத்தியில் இருந்த மத்தியஅமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியானகாங்கிரஸ் கட்சி கூறியது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி இவ்விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி விட்டது. அதாவது கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்புதெரிவித்தால், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிரானது. முஸ்லீம்களுக்கு ஆதரவானது என்ற முத்திரையை குத்த பாரதிய ஜனதா முயல்கிறது. இது தான்பாஜக வின் தந்திரமான மனநிலை.
ஏற்கனவே விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் டோகாடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களுக்கு எதிராகசெயல்படுகிறது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனவுடன் ஹிந்துக்கள் கவனிப்பாரற்று இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல் படுகிறது என்று கூறியுள்ளார். இது நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஹிந்துக்களைப் பாதிக்கும்வகையில் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை ஆட்சேபணை செய்யவேண்டிய கட்டாயமோ அவசியமோ எதுவும் இப்போது இல்லை.
தற்போது நாம் எதிர்ப்பு தெரிவித்து, நாளை முஸ்லீம் அமைப்பினர் இதற்கு சம்மதம் தெரிவித்தால் என்ன செய்வது? இப்போது இதை எதிர்த்தால், பின்னாளில்நமக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை என்றார்.
இன்னொரு தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் வெறுப்பையோ, விரோதத்தையோ சம்பாதிக்கக்கூடாது. அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நடுநிலையைக் கையாள வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி அரசியலில் இன்னும் ஒளி விட வேண்டும்என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.