தமிழகத்தைக் கலக்கும் தீவிரவாதிகளின் வெப்சைட்
சென்னை:
வீரப்பன் விவகாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ் நாடு விடுதலைப் படையின் வெப் சைட்.
சில நாட்களுக்கு முன் தான் இந்த வெப்சைட் தொடங்கப்பட்டிருக்கிறது. என்ற இந்த வெப்சைட் பெரும்பிரச்சனையைக் கிளப்பியிருக்கிறது. தமிழகம், இலங்கையில் யாழ்பாணம் மட்டுமல்லாமல், கேரளா, லட்சத் தீவுகள், மொரீசியஸ்,கர்நாடகத்தில் கோலார் ஆகிய நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை இணைத்து அகண்ட தமிழகத்தை உருவாக்குவோம் எனஅதில் சூளுரைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர ஆப்கான் தீவிரவாதி ஒசாமா பின் லேடன் முதல் லோக்கல் தீவிரவாதிகளான மாறன் வரை அனைவருக்கும் வாழ்த்தும்தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணன் சந்தன வீரப்பனுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரை லெபடினண்ட் கர்ணல் ரேஞ்சுக்குஉயர்த்தியிருக்கிறது இந்த வெப்சைட்.
இந்த வெப்சைட்டைக் காரணம் காட்டி தமிழகத்தில் கருணாநிதி அரசையே கலைக்கச் சொல்கிறார் ஜெயலலிதா.
இதையடுத்து விழித்து எழுந்திருக்கிறது தமிழக போலீஸ்.
போலீஸ் நடவடிக்கை:
இது பற்றி, தமிழக போலீஸ் டி.ஜி.பி ராஜகோபாலன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பிரிவினை வாதத்தை ஆதரித்துதமிழ்நாடு விடுதலை முன்னனி என்ற அமைப்பிற்கென இணையதள பக்கம் ஒன்றை என்ற முகவரியைக் கொண்ட இணையதளம்அளித்துள்ளதாக மக்கள் தொடர்பு சாதனங்களில் செய்தி வெளி வந்துள்ளது.
இது பற்றிய விபரம் ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறையினர் கவனத்திற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் இதர பிரிவு 124(ஓ) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 13 (1) (ஏ) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வரப்படுகிறது.
முகல்ஸ்தான், சூத்ரஸ்தான், தலித்ஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொண்ட இந்த இணையதளம்அகில இந்திய தாக்கமுடையதாகத் தெரிகிறது. வெல்பர் மேனுவல்ஸ் என்று இந்த இணையதளப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதலைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத ஆதாரமான முகல்ஸ்தான் - ஜங்க் என்ற இணையதளத்தின் இணைப்பாகும்.
எனவே, இவ்வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய அரசு நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஜி.பிராஜகோபாலன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications