காஷ்மீரை பாக்.கிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்: பரூக்
ஜம்மு:
என் உயிரை எடுத்துக் கொண்டாலும் காஷ்மீரில் இருந்து ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பாகிஸ்தான் அபகரிக்கமுடியாது என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறதொடங்கி விட்டார்கள். அவர்கள் ஜம்முவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்ளனர்.
இந்த முகாமை காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பார்வையிட்டார். அப்போது அங்கு அவர் பேசியதாவது:
காஷ்மீரில் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வரும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கவேண்டியது உள்ளது. அவர்களது பிரச்சனைகளை ஆராய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
இந்த குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து அவரிடம் பிரச்சனைகளை எடுத்துக்கூறுவார்கள். நிதி உதவி பெறுவதற்கும், முகாமின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் பேச்சு நடத்துவார்கள்.
மருத்துவ வசதி, ரோடு வசதி, குடிநீர் வசதி உடனடியாக செய்யப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி நிலவ பிரதமர்வாஜ்பாய் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவரது முயற்சி வெற்றி பெறும். பாகிஸ்தான் என் உயிரை எடுத்துக் கொண்டாலும் காஷ்மீரில் ஒரு அங்குலம்நிலத்தைக் கூட அபகரிக்க முடியாது என்றார் பரூக் அப்துல்லா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications