மியான்மர் செல்கிறார் ஜஸ்வந்த் சிங்
டெல்லி:
2001 ம் வருடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார். இதையடுத்து இந்தியாமற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பொருளாதாரம், அரசியல் உறவு இன்னும் மேம்பாடடையும் என்றுதெரிகிறது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மியான்மர் செல்கிறார்.
மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிகளான (இந்திய மாநிலங்கள்) மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், அருணாச்சலம்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் தீவிரவாதம், ஊடுருவல்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும்வகையில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் விவாதம் நடத்துவார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையிலும், இரு நாட்டிலும் உள்ள அரசியல் ஸ்திரத்தன்மையைப் பற்றிவிவாதிக்கும் வகையிலும் இந்த பயணம் இருக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications