செங்கோட்டையன் வழக்கில் 14 ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில் வக்கீல்கள் விவாதம் முடிவடைந்தது. இதற்கான தீர்ப்பு 14 ம் தேதி வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் உதிரிபாகங்கள், டிக்கெட் அச்சடித்தல், பஸ் பாடி கட்டுமானப்பணி போன்றவற்றை வாங்குவதில் ஊழல் செய்ததாக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணையில் ரூ 75 லட்சத்து 42 ஆயிரம் ஊழல் நடந்ததாக, அமைச்சர் செங்கோட்டையன், அவருடைய உதவியாளர் எழில், ஏஜன்ட் யூனிவர்சல் நடராஜன்ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் வக்கீல்கள் விவாதம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்து விட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வரும் 14 ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications