பாஸ்வானுக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தபால் துறையினரின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அமைச்சருக்கு தமிழகமுதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் காரணமாக தபால் பட்டுவாடா பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான தபால்கள் தேங்கிக்கிடக்கின்றன.
இது தொடர்பாக மத்திய தபால் தந்தி அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு தமிழக முதல்வர் கடிதம்எழுதியிருக்கிறார்.
தபால் துறையினர் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு,தபால் துறையினரின் பிரச்னையை தீர்வுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ராம் விலாஸ்பாஸ்வானுக்கு ஃபேக்ஸ் மூலம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications