பிரதமர் வாஜ்பாய் பேசியது தவறு: மூப்பனார்
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பிரதமர் வாஜ்பாய் பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்வெள்ளிக்கிழமை கூறினார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை சத்யமூர்த்தி பவனில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூப்பனார் பேசுகையில்,
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பெரும் கலவரம் நடந்தது.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் சில தினங்களுக்கு முன் பேசுகையில், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒரு தேசியஉணர்வு என்றார். பின்னர் நான் அப்படிப் பேசவேயில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்என்ற திட்டம் இல்லை என்பது போல் தனது பேச்சையே திசை திருப்பி விட்டுவிட்டார்.
பிரதமர் பதவி:
பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தவிரவும் அவர்கள் உண்மைக்குப்புறம்பாகவோ, எதிர்மறையாகவோ பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் அது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications