நீலகிரிக் காட்டில் வீரப்பன்?
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் காட்டுப் பகுதியில் வீரப்பன் இருக்கக் கூடும் என்று கிடைத்த தகவலையடுத்து காட்டுப்பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இதையடுத்து கல்லார் காட்டுப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்டோர் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கியுள்ளனர்.
1000 அதிரடிப்படை வீரர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் காட்டுப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
எங்கிருக்கிறான் வீரப்பன்:
நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்ற வீரப்பன் ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கருதப்பட்டது. இதனால்சத்யமங்கலம் காட்டில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.
இப்போது வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் நீலகிரி காட்டுப் பகுதிக்குள தஞ்சம் புகுந்து உள்ளதாககக் கூறப்படுகிறது.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதி இருந்து தெங்குமரஹாடா வந்து மாயார் ஆற்றை கடந்தால் நீலகிரி காட்டுப்பகுதிக்கு வந்து விடலாம்.
நீலகிரி காட்டுப்பகுதிக்குள் புகுந்த வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் காந்தவயல், லிங்காபுரம், சிறுமுகை வழியாகக் காட்டுக்குள் வந்து பதுங்கிஇருப்பதாக அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிரடிப்படையினர் கல்லார் காட்டில் காட்டில் முற்றுகையிட்டு உள்ளனர்.