முதலீடுகளை திரும்பப் பெறுவதில் அரசு தீவிரம்
டெல்லி:
இந்தியா முதலீடுகளை திரும்பப் பெறுவதில் தொலை நோக்குடன் செயல் பட்டுவருகிறது . இதில் முன்பு அரசின் இலக்குரூ 100 பில்வியனாக இருந்தது
ஜூலை மாதம் நடந்த அமைச்ரவைக் குழு 33 பொதுத்துறை நிறுவனங்ளிடமிருந்துமுதலீட்டை திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதில் 26நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் அல்லது விற்கப்படும்.
இவற்றில் இந்திய விமானத்துறை, ஏர்-இந்தியா, பாரத் அலுமினியம் கம்பெனி மற்றும்இந்தியன் பெட்ரோ கெமிக்கல் காரப்பரேஷன் நிறுவனங்களும் அடங்கும்.
வதோதாரவில் இருக்கும் இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷனின் (ஐபிசிஎல்)குஜராத் ரீஃபைனரி தன்னிடம் உள்ள பொருட்களை பற்றிய விவரங்களை வெளியிட்டபின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு மாற்றப்படும்
இதே போல் ஐபிசிஎல் லின் மற்ற இரு நிறுவனங்களான நாகோந்தேனில் இருக்கும்மகாராஷ்டிரா கேஸ் கிராக்கர் காம்ப்ளெக்சும், குஜராத்தின் பரூச் மாவட்டத்தில்இருக்கும் கார்தார் பெட்ரோ கெமிக்கல் காம்பளெக்சும் வதோரா கம்பெனிமாற்றப்பட்ட பின்பு முதலீட்டை திரும்ப தருமாறு கேட்டுக் கொள்ளப்படும்.
முதலீடுகளை திரும்பப் பெறுவது சிரமமான பணி. ஆனாலும் அதற்கான வேலைகள்தொடர்ந்து வருகின்றன என அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.