For Daily Alerts
Just In
கின்னஸ் சாதனை செய்த சென்னை சிறுமி
சென்னை:
5100 முறை நின்று, அமர்ந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் சிறுமி சிற்பா. இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
சென்னை கீழப்பாக்கம், சீதாகிங்க்ஸ்டன் மேல்நிலைப்பள்ளியில் 4 ம் வகுப்புப் படித்து வந்த மாணவி சிற்பா.
இவரது தந்தை லட்சுமி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது அப்பாவுக்கு சிற்பாவை எப்படியாவது ஓட்டப்பந்தயவீராங்கனையாக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்து வந்தது.
கடந்த 99 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி தனது ஏழாவது வயதில் சிற்பா கார்கில் வீரர்களுக்காக 15 கி.மீ.தூரம் ஓடி நிதி திரட்டியதோடு,உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.
இப்போது புதிய உலக சாதனையாக 5100 முறை நின்று, அமர்ந்து சாதனை செய்துள்ளார்.
இந்த சாதனையை ரயில்வே ஐ.ஜி.திலகவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Comments
Story first published: Friday, May 12, 2000, 5:30 [IST]