அம்பயரிடம் முறைகேடு: கங்குலிக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்:

கான்பூரில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது அம்பயரிடம் முறைகேடாக நடந்த கங்குலிக்கும், விக்கெட் கீப்பர் தாஹியாவுக்கும் நோட்டீஸ்வழங்கப்பட்டிருக்கிறது.

கான்பூரில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையோ நான்காவது ஒரு நாள் போட்டி கான்பூரில் திங்கள் கிழமை நடந்தது. இதில் வெற்றி பெற்றுஇந்தியா கோப்பையை வென்றது.

இந்த போட்டியின் போது அம்பயர்களின் முடிவுகள் இந்திய வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

போட்டியின் ஆரம்பத்தில் வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்து மாடன்டோவின் பேட்டில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் தாஹியாவால் பிடிக்கப்பட்டது. ஆனால்அதற்கு அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதே போல் கங்குலி பந்து வீசிய போது பல முறை எல்.பி.டபிள்யூ அவுட் கேட்ட போது அம்பயர்கள் அவுட் கொடுக்கவில்லை. இதனால் கங்குலி தன்அதிருப்தியை வெளிப்படுத்தினார். கீப்பர் தாஹியாவும் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போதே அம்பயர் சாத்தே இவர்கள் இருவரையும் எச்சரித்தார்.

இந்தியா பேட் செய்த போது கங்குலி அவுட் கொடுக்காத அம்பயரை எதிர்த்து ஜிம்பாப்வேயின் பந்து வீச்சாளர் ஸ்ட்ராங் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் கங்குலி ரன் எடுக்க ஓடிய போது ஸ்ட்ராங் கங்குலியை திட்டினார். அதற்கு பதிலுக்கு கங்குலி அவரை திட்டினார்.

போட்டி முடிந்த பின் கங்குலிக்கும், தாஹியாவுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+