For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயாவுக்காக ரத்த ஓவியம், இது ஹூசைனி ஸ்டைல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நான் வரைந்த ஒவியங்களை என்னிடம் ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுஅறிவித்திருக்கிறார் கராத்தே வீரர் ஹூசைனி.

புதுமைகளை செய்து காட்டி பெயர் பெற வேண்டும் என்கிற ஆசையில் கராத்தே வீரர் ஹூசைனி எதையாவதுசெய்வார். புதுமை என்கிற பெயரில் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.

வருகின்ற 18-ம் தேதி சென்னையில் ஒவியக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கான போஸ்டர்கள்சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்கள் முறையான அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்ததாகக்கூறப்படுகிறது. இதைத் தொடந்து போலீசார் ஹூசைனியின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அங்கே நிர்வாண ஓவியங்கள் பலவற்றை போலீஸார் கைப்பற்றினர். ஹூசைனியின் அலுவலகத்தில் இருந்தஊழியர்கள் ஐந்து பேரையும் கைது செய்து உடனே விடுதலையும் செய்து விட்டனர்.

ஹூசைனி அறிக்கை:

இந்த நிலையில், ஹூசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித் கலா அகாடமியில் வரும் 18-ம் தேதி முதல்23-ம் தேதி வரை அதர் ஹேண்ட் என்கிற தலைப்பில் நான் ஓவியக் கண்காட்சி நடத்த இருந்தேன்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்த போலீஸார் என்னுடையஓவியங்களை எடுத்துச் சென்று விட்டனர். போலீஸார் எடுத்துச் சென்ற ஓவியங்கள் மொத்தம் 144.

என் ஓவியங்களை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டதற்கு அரசியல் பின்னணியும் காரணம்.

ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவரை லலித் கலாஅகாடமியில் எந்த ஒவியரும் போலீஸ் அனுமதி பெற்று வைத்தது கிடையாது.

ஜெ.வுக்காக ரத்தத்தால் ஓவியம்:

போலீஸார் பறிமுதல் செய்த ஓவியங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் ரத்தத்தால் வரைந்தஒவியமும் ஒன்று.

நான் வரைந்த விலை மதிப்பில்லாத ஓவியங்களை என்னிடம் ஒப்படைக்கா விட்டால், செவ்வாய்கிழமை முதல்சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு உசைனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X