சி.பி.ஐ. அதிகாரிகளுடன் ஐ.சி.சி. அதிகாரிகள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புக் குழுவினர் டெல்லியில் சி.பி.ஐ.அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில்வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின்தலைவர் பால் காண்டன் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது.

இக்குழுவினர், வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் உள்ள தொடர்புகுறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் முத்தையா மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல்தடுப்பு கமிஷனர் மாதவனிடமும் ஆலோசனை செய்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளை இந்த குழுவினர் செவ்வாய்கிழமை சந்தித்தனர்.

நான்கு பேர் கொண்ட இந்த குழுவினர் சி.பி.ஐ. இணை இயக்குநர் சவானி மற்றும் உயர்அதிகாரிகளிடம் வெளிநாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் இருக்கும்தொடர்பு குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். அதற்கான ஆதாரங்களையும் இவர்கள்சேகரித்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் ஆலன் பீக்காக்கும்இந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.

பால்காண்டன், தான் நடத்திய ஆலோசனை பற்றி கூறுகையில், சி.பி.ஐ. அதிகாரத்திற்குஉட்படாத பகுதிகளில், சம்பந்தப்பட்ட வீரர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்துவிசாரணை நடத்துவதற்கும், இது தொடர்பான ஆதாரங்கள் திரட்டவதுதான் எங்கள்பயணத்தின் நோக்கம் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+