மது விலக்கு கோரி பெண்கள் பேரணி
திருவள்ளூர்:
மது விலக்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் சங்க இயக்கங்கள் சார்பில்செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.
பேரணியில் மாநில பெண்கள் இணைப்புக் குழு, இந்திய மாதர் சங்கம், வேலூர் மாவட்ட பெண்கள் அமைப்பு, கிராம பெண்கள் கல்வி அறக்கட்டளை ஆகியஅமைப்புக்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
பேரணியின் இறுதியில், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையை எதிர்த்த இரண்டுபெண்களை வெட்டிப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
இச்சம்பவத்தில் பெண் கேட்பதில் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்று போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் எழுதியபள்ளனர்.இதை மாற்றி கள்ளச்சாராயத்தை எதிர்த்த பெண்கள் கொலை என்று எழுத வேண்டும். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் பூரண மதுவிலக்கைஅமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications