வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது .. சின்ஹா
டெல்லி:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்தியநிதித்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதன்கிழமை லோக்சபாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பங்குகளின் அளவை 33 சதவீதம் அல்லதுஅதற்கும் குறைவாக குறைக்க வகை செய்யும் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசியதாவது:
இந்த சட்ட மசோதாவுக்கும், வங்கிகளின் முதலீடுகளை குறைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும்,அரசு விற்கும் பங்குகளை வாங்க இருப்பது யார் என்பது குறித்து இப்போது கூறுவதறிகில்லை.
பங்குகளை குறைப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை ஏற்றே இந்த முடிவுமேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை.
இந்த சட்டமசோதாவைக் கொண்டு வரும் முடிவை 1994-ம் ஆண்டு ஆட்சிப பொறுப்பில் இருந்த காங்கிரஸ்அரசுதான் எடுத்தது. (இந்த சமயத்தில் காங்கிரஸ் உறப்பிர்கள் குறுக்கிட்டு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தனர்.இதையடுத்து இதுகுறித்து மேற்கொண்டு எதையும் சின்ஹா கூறவில்லை.) என்றார் சின்ஹா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications