விளையாட்டு மைதானத்தில் ஒரு பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வேளச்சேரி எஸ்.ஏ.எ.எப். விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், எஸ்ஏஎப் விளையாட்டு மைதானத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் இவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது.உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன. இவரது பிணம் ஒரு சாக்குமூட்டையில் கட்டி அங்கு வீசப்பட்டிருந்தது.
அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்கள் இவரது பிணத்தைப் பார்த்து எங்களுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று பிணத்தைக்கைப்பற்றினோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications