அஸார் மீது ரசிகர் வழக்கு
ராஜ்கோட்:
மேட்ச் பிக்ஸிங் காரணமாக ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்அஸாருதீன் மற்றும் ஜடேஜா ஆகியோர் மீது ராஜ்கோட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் போலீஸில், மோசடிபுகார் கொடுத்துள்ளார்.
1996-ம் ஆண்டு இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த டைட்டன் கோப்பை போட்டியைபிக்ஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றியதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
ராஜ்கோட் நகரிலுள்ள பிரதியும்நகர் போலீஸில் இதுகுறித்து சஞ்சய் விகாஸ் என்ற வழக்கறிஞர் கொடுத்துள்ளபுகாரில் கூறியிருப்பதாவது:
போட்டியை பிக்ஸ் செய்ததன் மூலம் என்னைப் போன்ற கிரிக்கெட் ரசிகரை அஸாருதீன் ஏமாற்றி விட்டார்.அஸாருதீன் மற்றும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள், கிரிக்கெட் விளையாடாமல், என்னைப் போன்றரசிகர்களின் உணர்வுகளுடன் விளையாடி எங்களைப் புண்படுத்தி விட்டனர் என்று மனுவில் கூறியுள்ளார்.
புகாரை ஏற்றுக் கொண்ட போலீஸார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மீது சட்டப் பிரிவு 420 மற்றும் 120(பி)பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இந்த மனு தொடர்பாக யாரும் உடனடியாக கைது செய்யப்பட மாட்டார்கள் என்று ராஜ்கோட்மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதீர் சின்ஹா தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.