சென்னை கடலில் மூழ்கி பெங்களூர் இளைஞர் சாவு
காஞ்சிபுரம்:
மாமல்லபுரம் கடலில் குளிக்கச் சென்ற பெங்களூர் வாலிபர் கடலில் மூழ்கி இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவுது:
பெங்களூர் காமராஜ் பேட்டையில் வசிக்கும் பெர்னாட் தலைமையில் 60 பேர் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலாசென்றவர்கள் அனைவரும் கடலில் குளித்தனர். அனைவரும் குளித்து கரையேறிய பின்னும் சுற்றுலா பயணிக்ளில் ஒருவரானசரவணா (20 ) என்பவர் மட்டும் கரை திரும்பவில்லை. அவரை பல இடங்களில் சுற்றுலாக் குழுவினர் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதையடுத்து பெர்னாட் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யு விசாரணை செய்து வந்தனர்இந்நிலையில் சரவணாவின் உடல் மாமல்லபுரம் கடற்கரையோரமுள்ள ஒரு ஓட்டலின் அருகே ஒதுங்கியது.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநனர்.பிரோத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.