அயோத்தி குழப்பம் தொடர்கிறது .. ராஜ்யசபை ஒத்திவைப்பு
டெல்லி:
அயோத்தி பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் ராஜ்யசபை மீண்டும்ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அயோத்தி பிரச்சினை, நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும்கலக்கி வருகிறது. லோக் சபையும், ராஜ்ய சபையும் தொடர்ந்து அமளியைச் சந்தித்துவருகின்றன.
வியாழக்கிழமை ராஜ்யசபை கூடியதும், அயோத்தி பிரச்சினை குறித்து விவாதம் நடத்தசபைத் தலைவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.வாக்கெடுப்புக்கு விடும் விதத்திலான பிரிவின் கீழ் விவாதம் அமைய வேண்டும்என்றும் அவர்கள் கோரினர். அப்போது பிரதமர் வாஜ்பாய் சபையில் இருந்தார்.
வாஜ்பாய் சபையில் இருந்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிக அளவில் கூச்சல்எழுப்பினர். அவர்களை எதிர்த்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.இதனால் சபையில் யார், என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை.
இந்த நிலையில், உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயன்ற சபைத் தலைவர் கிருஷ்ணகாந்த், அது தோல்வி அடைந்ததால், சபையை வியாழக்கிழமை முழுவதும்ஒத்திவைப்பதாகக் கூறி விட்டு வெளியேறினார்.
யு.என்.ஐ.