இங்கிலாந்து அமைச்சருக்கு இலங்கை அரசு கண்டனம்
கொழும்பு:
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்று இங்கிலாந்துவெளியுறவுத்துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன்ஸ் கூறியதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்ககொண்டார். அப்போது அவர் பேசுகையில்,விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டால் அதற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவை ஆதரவு தராது. மாறாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில், வடக்கு யாழ்ப்பாணத்தில் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு கண்டிப்பாக சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு நல்கும் என்று கூறியிருந்தார். இதற்குஇலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர்பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் புலிகள் சுயநிர்ணயம் கேட்டால் அதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என்று இங்கிலாந்துஅமைச்சர் ஹெயின் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது போன்ற அறிக்கைகளை இலங்கை ஒருபோதும் ஊக்குவிக்காது. விரும்பவும் செய்யாது.
உதாரணமாக இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சுய நிர்ணயம் கேட்கவில்லை. மேலும் அரசியலமைப்புச் சட்டம் என்று ஒன்று இருப்பதை நாம்ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றார்.
இதற்கிடையே, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சமரச முயற்சியில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் இனப்பிரச்சனைக்கான தீர்வைகேலிக்கூத்தாக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறி 100 க்கும் மேற்பட்ட ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியினர்புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஜனதா விமுக்தி பெருமூனா பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறுகையில், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில்நார்வே தூதுக்குழுவினர் நேர்மையாகச் செயல்படவில்லை.
இலங்கையில் பலமுறை விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டும் அவை அனைத்தும் படுதோல்வியையே அடைந்துள்ளன. அது ஒரு கசப்பான அனுபவம். இது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப்புலிகள் அமைப்பு உலக அளவில் மிகவும் அபாயகரமான தீவிரவாத அமைப்பாகும்.அவர்கள் ராக்கெட் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலிமையானவர்கள் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications