உலக இரட்டையர் டென்னிஸ்: இந்திய ஜோடிக்கு முதல் வெற்றி
பெங்களூர்:
பெங்களூரில் நடந்து வரும் கோல்ட் ஃப்ளேக் உலக இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின்லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்றது.
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது. புதன்கிழமை முதல் நாள் போட்டி நடந்தது. இதில்இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி நெதர்லாந்தின் பால் ஹார்ஹியுஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் சான்டன்ஸ்டோல் ஜோடியை 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்றனர்.
இந்தியா இன்னும் இரண்டு போட்டிகளில் மோதவுள்ளது. போட்டி முடிந்த பின் விஜய் அமிர்தராஜிடம் பயஸ் கருத்துத்தெரிவிக்கையில், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் மீண்டும் வெற்றி பாதைக்குதிரும்பியது மகிழ்ச்சி தருகிறது. இந்தியாவில் விளையாடுவது என்றுமே மகிழ்ச்சி தருவதாகும் என்றார்.
மகேஷ் பூபதி கூறுகையில், இது போன்ற பெரிய போட்டிகளை நம் சொந்த நாட்டில் விளையாடுவது மகிழ்ச்சி தரக்கூடியது.நாங்கள் இருவரும் இணைந்து விளையாடி பெற்ற வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications