புஷ்ஷுக்கு வாஜ்பாய் வாழ்த்து
டெல்லி:
ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஜூனியர் தலைமையிலான அமெரிக்காவுடன், இதமான நட்பைஏற்படுத்திக் கொள்ள இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜார்ஜ் புஷ்ஷுக்கு அனுப்பியவாழ்த்துச் செய்தியில் வாஜ்பாய் கூறியிருப்பதாவது:
இந்திய, அமெரிக்க உறவில் புதிய பரிமானம் ஏற்படும் என்று இந்தியா நம்புகிறது.இதுவரை இருந்து வரும் நட்புடன், இதமான, அழுத்தமான நட்பு தொடர்ந்து நீடிக்கும்என்று நாங்கள் விரும்புகிறோம்.
அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனதுஇதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மில்லனியத்தில்அமெரிக்காவை தலைமைப் பொறுப்பில் நடத்திச் செல்லவுள்ள உங்களுக்கு எனதுவாழ்த்துக்கள். இந்தியாவும், இந்திய மக்களுக்கும் உங்களுக்கு தங்களது ஆதரவைத்தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சர்வதேச அமைதி மற்றும் நிலைத் தன்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் சேர்ந்துசெயல்படும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில்கூறியிருந்தார் வாஜ்பாய்.
பதவி விலகிச் செல்லும் அதிபர் பில் கிளிண்டன், இந்தியா வந்து சென்ற பின், இந்திய,அமெரிக்க உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டது. உரசல்கள் நீங்கி, இரு நாடுகளும்மிகவும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டன. கிளிண்டன் வருகையையடுத்து,வாஜ்பாய் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு இருநாடுகளும் மிகவும் நெருங்கி விட்டன.
அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான, குடியரசுக் கட்சி எப்போதுமே,இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்ததில்லை. ஜார்ஜ் புஷ்ஷும் குடியரசுக் கட்சியைச்சேர்ந்தவர்தான். எனவே புஷ் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு முக்கியமானதாகமாறியுள்ளது என்பதை மறக்க முடியாது.
கிளிண்டன் போட்டுக் கொடுத்த பாதையில் புஷ் நடப்பாரா அல்லது புதிய பாதைஅமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications