For Daily Alerts
Just In
விருதுநகர் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் சாவு
மதுரை:
சபரிமலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் அடங்கிய டாடா சுமோ வேன் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 பேர் இறந்தனர்.
கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த சிலர் டாடா சுமோ வேனில் சபரிமலைக்குச் சென்றிருந்தனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு கர்நாடகம் திரும்பினர். வழியில் மதுரை செல்ல வந்து கொண்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை விருதுநகர் அருகே வந்தபோது, அவர்களது வேனுடன், லாரியொன்று நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 3 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இறந்தவர்கள் பாலு, கேத்தாரி, பிரமோத் மனாய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]