அகதிப் போர்வையில் இருந்த "புலி கைது
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அகதிகள் முகாமில் அகதி போல இருந்த விடுதலைப்புலி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்குள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 14இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் மொத்தம் 4,500 க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு போளூர் தாலுகா கஸ்தம்பட்டி முகாமில் நவரத்தினராஜா (28) என்ற விடுதலைப்புலியை க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர்.
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் . இவரது உடலின் பல இடங்களில் குண்டு காயங்கள் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரை போலீஸார் செங்கல்பட்டுசிறப்பு முகாமில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications