நியூசி. கால்பந்து அணியின் இந்திய பயணம் ரத்து
வெல்லிங்டன்:
இந்தியாவுக்கு வருவதாக இருந்து நியூசிலாந்து கால்பந்து அணி தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதம் மில்லனியம் சூப்பர் சாக்கர் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.சர்வதேச அளவிலான இப்போட்டியில், இந்தியா தவிர, உருகுவே, சிலி, கொலம்பியா, காமரூன் உள்பட 16நாடுகள் கலந்து கொள்கின்றன. அகில இந்திய கால்பந்துக் கழகம் இந்தப் போட்டியை நடத்துகிறது.
இப்போட்டியில் நியூசிலாந்தும் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாகநியூசிலாந்து கூறியுள்ளது. பயணம் செய்வது மற்றும் போட்டி குறித்த விவரங்களை அறிவதில் சிரமம் இருப்பதால்சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கூறியுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்துக் கால்பந்துக் கழகம் தரப்பில் தெரிவிக்கையில், மில்லனியம் சூப்பர் சாக்கர் கோப்பைப்போட்டியிலிருந்து விலகுமாறு, ஆசிய கால்பந்து சம்மேளனம் எங்களக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆக்லாந்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள, உலகக் கோப்பை தகுதிக் கால்பந்துப் போட்டியில் கலந்துகொள்வதற்குரிய பயிற்சிப் போட்டியாக இந்தியப் பயணம் அமையும் என்று எதிர்பார்த்தோம் என்றுதெரிவிக்கப்பட்டது.
மில்லனியம் கோப்பைக் கால்பந்துப் போட்டி கல்கத்தா, கோவா, கொச்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications