தொடர்ந்து போராடுவோம் .. தபால் ஊழியர்கள்
சென்னை:
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அஞ்சல் துறை ஊழியர்கள் அறிவித்துஉள்ளனர்.
கடந்த 18.12.98 அன்று போட்ட ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும், 15 அம்சக் கோரிக்கைகளைநிறைவேற்றக் கோரியும் டிசம்பர் 5-ம் தேதி முதல் தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் ஊழியர்களது போராட்டத்தை சட்டவிரோதமானது மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்,வெள்ளிக்கிழமைக்குள் தங்களது போராட்டத்தை தபால் ஊழியர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.இருப்பினும் ஊழியர்களது போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை மாலை அஞ்சல் - ஆர்.எம்.எஸ் மாநில சங்கங்களின் இணைப்புக் குழுவின் தலைவர்கண்ணையன், கன்வீனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொடுமையான சட்டங்களை அஞ்சல் ஊழியர்கள் மீது பயன்படுத்திடும் போது அதே சட்டங்களைதமிழக அரசும் எங்கள் மீது பயன்படுத்திடக் கூடாது என தமிழக முதல்வர் கருணாநிதியைக் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எங்களை மிரட்டி வருகிறார். அவரது மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.
தமிழகம் முழுவதும் 50 லட்சம் தபால்கள்தான் தேங்கி இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டவுடன் தேங்கியுள்ள தபால்களை ஓரிரு நாட்களில் இரவு - பகல் பாராது பட்டுவாடா செய்து விடுவோம்.
எங்கள் போராட்டத்திற்கு தந்தி, தொலைபேசி, ரயில்வே ஆகிய இலாகாவைச் சேர்ந்த ஊழியர்களும் ஆதரவுதெரிவித்துள்ளனர். தபால்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்களும் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுமூக முடிவு ஏற்படவில்லை என்றால் அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடவிருக்கிறார்கள். நாங்கள் எத்தனை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோமோஅத்தனை நாட்களுக்கு சம்பளம் மட்டும் தான் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications