வங்கி கடன் மோசடி: தொழிலதிபர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
வங்கியில் பெற்ற கடனைத் திருப்பித் தராத தொழிலதிபர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வடக்கு பிரதட்சண சாலையைச் சேர்ந்தவர் முருகநாதன். இவர் ஜெய் எக்ஸ்போர்ட் என்ற கம்பெனியை நடத்திவருகிறார்.
ஏற்றுமதிக்காக இவர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 35 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த 98ம் ஆண்டு நவம்பர் மாதம்வாங்கிய கடனை இவர் திருப்பிச் செலுத்தவில்லை.
எனவே, இவர் மீது பாங்க் மேலாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். மேலும்,அவர் கடன் பெற ஜாமீன் கையெழுத்திட்ட அவரது மனைவி சின்னக்குளத்துப் பாளையம் பாப்பாத்தி, ராமகிருஷ்ணன் ஆகியோர்மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications