ரஷியாவின் புதிய "பாதுகாப்பு வளையம்
மாஸ்கோ:
ரஷியா, சீனா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து ஆசிய நாடுகளின்பாதுகாப்புக்கு புதிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என்று ரஷியாயோசனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான திட்டத்தையும் ரஷ்யா வகுத்துள்ளது. பிராந்திய பாதுகாப்புதொடர்பாக இந்த நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ரஷியநாடாளுமன்ற டூமா சபையின் பாதுகாப்பு கமிட்டிக்கான தலைவர் ஜெனரல் அந்தேரிநிகோலேயேவ் கூறியுள்ளார்.
ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகள் வட அட்லாண்டிக் ஒப்பநத்த்தை(நேடோ) எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தேரி கூறுகையில், நேடோ அமைப்பால் ரஷ்யாவிற்கும்,ஈரானுக்கும் எப்போதுமேஆபத்து உள்ளது. இதே போன்ற ஆபத்து இந்தியாவிற்கும் உள்ளது. இந்த நாடுகள்அனைத்தும் பொது திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நேடோவின்வளர்ச்சியை தடுக்க முடியும் என்றார்.
இதற்கிடையே, ஈரான் அதிபர் முகமது கடாமி அரசு முறை பயணமாக ரஷ்யாவிற்குவிரைவில் செல்லவிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.