கிரிக்கெட் வீரர்களுக்கு நோட்டீஸ் .. வருமான வரித் துறை முடிவு
டெல்லி:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் புகார் கூறப்பட்டு, சி.பி.ஐ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டகிரிக்கெட் வீரர்கள் மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா, நிகில் சோப்ரா,நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவுசெய்துள்ளது.
இவர்களது வருமானம் மற்றும் அதற்கு அவர்கள் வரி கட்டியிருக்கிறார்களா என்பதைக்கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அதேபோல, முன்னாள் கிரிக்கெட் வீரர்கபில் தேவின், கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த விசாரணையையும் வருமானவரித்துறை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கபில் விவகாரத்தில், அவரது சொத்துக்களை கணக்கிடுவதற்கு கால தாமதமாகும்என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பல கிரிக்கெட் வீரர்களுக்குகோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கெல்லாம் வரி கட்ட வேண்டுமானால், 90-91 ம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டுவரைக்குமான வரியை கிரிக்கெட் வீரர்கள் ஒரே மாதத்தில் கட்ட வேண்டியதிருக்கும்.
இதுதவிர 60 சதவீத அபராத வரியையும் கிரிக்கெட் வீரர்கள் கட்ட வேண்டியதிருக்கும்.வழக்கமாக இது 34 சதவீதம்தான் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.