சட்ட விரோதமாக நடக்கிறார் கருணாநிதி .. வி.எச்.பி
சென்னை:
முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கருணாநிதி கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அகிலஉலகத் துணைத்தலைவர் வேதாந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைக்கு முன்பு முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த அரசியல்வாதிகள் பல முயற்சிகளை மேற் கொண்டார்கள். இது முடிவில் தேசப்பிரிவினையில் முடிந்தது.
ஒரு புறத்தில் அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல் மதச்சார்பின்மைக்கு விசுவாசிகள் என்று கூறிக் கொண்டு, இன்னொரு புறத்தில் மதத்தின்அடிப்படையில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக அறிவிப்பது அவர்களது இரட்டை வேடத்தையும், அவர்களது போலி மதச் சார்பின்மையையும்வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இத்தகைய இடஒதுக்கீடு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும், வேறு சில கட்சிகளும்தங்கள் பொதுவான செயல்திட்டத்திற்கு விரோதமாகப் பேசியும், செயல்பட்டும் தங்கள் கட்சி நலன்களைக் காப்பாற்றுவதில் அக்கறைகாட்டுகின்றன என்று அவர் கூறியிருந்தார்.