For Quick Alerts
For Daily Alerts
Just In
அரசியல்வாதிகளை மக்கள் கண்காணிக்க வேண்டும்
சென்னை:
அரசியல்வாதிகளை மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கண்காணிக்க வேண்டும் என்று முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் கூறியுள்ளார்.
சென்னையில் ஆட்சி முறை மற்றும் கூட்டணி ஆட்சி முறை குறித்த கருத்தரங்கில் அவர் பேசுகையில்,அரசியல்வாதிகளிடம் அரசியலை ஒப்படைத்து விடக் கூடாது. அரசியல்வாதிகளிடம் அரசியலை விட்டு விடக்கூடாது. மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க வேண்டும்.
அப்படி இருந்தால்தான் அரசியலில் தவறு நடக்காது. அப்படி நடந்தால்தான் ஆட்சியிலும் தவறு ஏற்படாது,மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியாவில் இனிமேல் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. எந்த கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாதுஎன்றார் அவர்.
Comments
Story first published: Wednesday, May 24, 2000, 5:30 [IST]