ஆனைக்கட்டி ஆசிரமத்தில் ஆசி பெற்றார் ரஜினி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் உள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்தில் உள்ள சுவாமி சச்சிதானந்தா மகாராஜிடம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆசி வாங்கினார்.
கோவையில் உள்ளது ஆனைக்கட்டி ஆசிரமம். இங்கு சுவாமி சச்சிதானந்தா மகாராஜ் வசித்து வருகிறார். சனிக்கிழமை இந்த ஆசிரமத்துக்கு நடிகர்ரஜினிகாந்த் வந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர் அங்கிருந்து ஆனைக்கட்டிக்கு கார் மூலம் சென்றார்.
தனது 51 வது பிறந்தநாளையொட்டி சுவாமி சச்சிதானந்தாவிடம் ரஜினி ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ளசச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளிக்குச் சென்றார். அங்குள்ள பள்ளி, மாணவ, மாணவர்களிடம் பேசினார்.
பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினார். ரஜினி ரசிகர்கள் அங்கு கூடி விடுவார்கள் என்பதால் அவரது வருகை மிகவும் ரகசியமாகவைக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications