மாருதி ஊழியர்கள் நால்வர் சாகும் வரை உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாருதி உத்யோக் நிறுவனத்தின்ஊழியர்களில் 4 பேர் திங்கள்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கினர்.

வேலைநிறுத்தம் செய்து வரும் மாருதி நிறுவன ஊழியர்களில் 92 பேரை நிர்வாகம்சஸ்பெண்ட் செய்ததை வாங்கக் கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாருதி உதயோக் நிறுவன ஊழியர் சங்க இணைச் செயலாளர் மதன்லால் சர்மா,தயாசந்த் யாதவ், மானேகிராம், டி.கே.செளஹான் ஆகியோர் உண்ணாவிரதம்துவங்கிய ஊழியர்கள்.

டெல்லியிலுள்ள மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் மனோகர் ஜோஷிஅலுவலகம் முன்பு திங்கள்கிழமை காலை இவர்கள் போராட்டத்தைத் துவக்கினர்.

ஊழியர்களின் கோரிக்கை முழுவதும் ஏற்கப்படும் வரை தங்களது போராட்டம்தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

25 பேர் டிஸ்மிஸ், 24 பேர் சஸ்பெண்ட்:

இதற்கிடையே, மாருதி நிறுவனத்தில் கதவடைப்பு அறிவிக்கப்படவில்லை என்றுமத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் வல்லபாய் கத்திரியா ராஜ்யசபையில்தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கதவடைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ள ஊழியர்களில் 162 பேர் மீண்டும் வேலைக்கு வந்தனர்.

மெதுவாக வேலை பார்த்தல், வன்முறையாக நடந்து கொண்டது போன்றதவறுகளுக்காக 24 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

25 பேர் வேலைக்கு வராத காரணத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்வேலைக்கு வராததோடு, நிறுவனத்தில் உள்ள மெஷின்களுக்கும், பிறபொருட்களுக்கும் பெரும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதுதவிர 21 பேரின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+