சீனாவிலிருந்து தரக் குறைவான பொருள் இறக்குமதி: அரசு கவலை
டெல்லி:
லண்டனைச் சேர்ந்த வேர்ல்டு நிறுவனம், தமிழகத்தில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளதாகஅதன் தலைவர் சாம் பிட்ரோடா திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில், வேர்ல்டு டெல்லும், ரிலயன்ஸ்சும் இணைந்து கூட்டாக செயல்படுத்துகின்றன. டெல்லியில் இதுகுறித்து சாம்பிட்ராடோ, இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில் வேர்ல்டு டெல் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டம் 2001 ம் ஆண்டிற்குள் முடிவடையும்.திட்டத்திலிருந்து பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடுத்த இரண்டு வாரங்களில் வேர்ல்டு டெல் குழுவினர், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய ஆப்டிக் பைபர் பதிக்கும் பணி குறித்து ரிலையன்ஸ்நிறுவனத்தாருடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக தலைமை செயலதிகாரியை நியமிப்பது, பங்குகளை கையாளுவது, பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்துஆலோசனை நடத்தப்படும். ஜனவரி முடிவில் இந்த ஆலோசனைகள் முடிவடையும்.
பல அமெரிக்க நாடுகளில் ஆப்டிகல் பைபர் பதிக்கும் பணி உள்ளிட்ட இன்டர்நெட் வளர்ச்சித் தொடர்பான பல திட்டங்களை வேர்ல்டு டெல்மேற்கொண்டுள்ளது. மெக்சிகோவில் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இன்டர்நெட் திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேயிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஆப்டிக் பைபர் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகம் தவிர, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத்மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தொலைத் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை வேர்ல்டு டெல் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் திட்டத்தைத் தவிர 1,500 இன்டர்நெட் சமூகக் கூடங்களை மையங்கள் அமைக்கவும் வேர்ல்டு டெல் திட்டமிட்டுள்ளதுஎன்றார் சாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications