For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ட்சுக்கு மருந்து தருவதாக கூறி மோசடி

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோட்டில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

இவரும், இன்னொரு போலி டாக்டரும் சித்த மருத்துவம் பார்ப்பதாகக் கூறி அலோபதி மருந்துடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஈரோட்டில் உள்ளது ஏ.வி கிளினிக் உள்ளது. இந்த கிளினிக்கை ஆறுமுகராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த கிளினிக்கில் எய்ட்ஸ்நோய்க்கு மருந்து இருப்பதாகக் கூறி பெருமளவில் விளம்பரம் செய்து வந்தனர்.

இதை நம்பிய பொதுமக்கள் பலர், கிளினிக்கிற்கு வந்தனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர்கள் சித்த மருத்துவம் பார்க்காமல், ஆங்கிலமருந்துகளைக் கலந்து பல மருந்துகளைத் தயாரித்து வந்தனர். இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்து வந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட கலெக்டரிடம்புகார் தெரிவித்தார். இதையடுத்து இந்தப் புகார் குறித்து டி.எஸ்.பி.க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலி டாக்டரைப் போலீசார் தேடிச் சென்றனர். அப்போது ஆறுமுகராஜன் கிளனிக்கில் போலி மருந்து கொடுத்து சிகிச்சை அளித்துவந்ததைக் கண்டறிந்தனர். இந்நிலையில், சச்சிதானந்தம் தலைமறைவானார். இவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கிளினிக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்தை கைப்பற்றினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X