ஆங்கிலோ பிரெஞ்சு மில்: பாண்டி. முதல்வர் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ பிரெஞ்சு மில்லின் பிரச்சனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல்தலைவர்களுக்கும், வர்த்தக தொழிற்சங்கங்களுக்கும் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் உள்ள ஆங்கிலோ, பிரெஞ்சு மில்லில் பலபிரச்சனைகள் உள்ளன. இந்தப் பிரச்சனைகள் மில் தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் மட்டுமேசம்பந்தப்பட்டது. இதை அரசியலாக்கும் முயற்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.
கடந்த வருடம் இந்த மில்லின் வருமானம் ரூ 48.57 கோடியாக இருந்தது. இந்த வருடம் மில்லின் வருமானம் ரூ62.24 கோடியைத் தொட்டுள்ளது. அதாவது வருமானம் 28.15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருட ஏற்றுமதிரூ 15.57 கோடியாக இருந்தது. இந்த வருட ஏற்றுமதி ரூ 18.99 கோடியாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து மில்லுக்கு ஆர்டர்கள் வந்துகுவிகின்றன. ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார்சண்முகம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications