For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

வான்கூவர்:

கனடாவில், 1985 ம் வருடம் ஏர் இந்தியா ஜெட் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள 2 முக்கியக்குற்றவாளிகளுக்கு வியாழக்கிழமை ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் ரிபுடாமன் சிங் மாலிக் மற்றும் அஜப் சிங் பாக்ரிஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் வியாழக்கிழமை கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றனர். அப்போது தங்களை ஜாமீனில்விடக் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிகிறது.

மாலிக் (53) மற்றும் பாக்ரி (51) அகியோர் வான்கூவர் அருகே ஏர் இந்தியா ஜெட் விமானத்தைக் குண்டு வைத்து தகர்த்தது (இதில் 329 பேர்இறந்தனர்) மற்றும் டோக்கியோ விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம் (இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்) ஆகியவற்றில் முக்கியக்குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னணியில் சீக்கியத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று போலீஸார் நினைத்தனர். கனடாவின் மேற்குப்பகுதியில் அதிகமாக சீக்கிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாலிக்கும், பாக்ரியும் அதே பகுதியைச் சேர்ந்த சீக்கியர்கள். இவர்களேகுண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருப்பவர்கள் என்ற சந்தேகம் இருந்தது.

இதையடுத்து இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X