இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொதுத்துறை வங்கிகளில் அரசு முதலீட்டை 33 சதவீதமாகக் குறைக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி நாடு முழுவதும் 13 லட்சம் வங்கிஊழியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் குப்தா கூறியதாவது:
வங்கித்துறையில் அரசு முதலீட்டை குறைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வியாழக்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்நடத்துகின்றனர்.
இதில் 13 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு பாரதிய மஸ்தூர் சங்கம், அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவுதெரிவித்துள்ளன.
தனியார் வங்கிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. வங்கிகள் தனியார்மயமாக்குவதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதுஎன்றார் குப்தா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications