For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் தனி மாவட்டமாகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் அரியலூர் என்ற புதிய மாவட்டம் உருவாகிறது. புதிதாக உருவாக்கப்படும் இந்த அரியலூர் மாவட்டம்தமிழகத்தின் 30 வது மாவட்டமாகும்.

சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் 29 மாவட்டங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து 30 வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம்உருவாக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி ராகேஷ் குமார் யாதவ் கோட்ட, வட்ட எல்லைகளைப் பிரித்தது குறித்துஅறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையை ஏற்று வரும் முதல் தேதியிலிருந்து அவரையே மாவட்டக் கலெக்டராக நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு பதிவாளருடைய ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்ததும் இது பற்றிமுடிவெடுக்கப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X