நவாஸ் நாடுகடத்தல் சரியே .. முஷாரப்
இஸ்லாமாபாத்:
சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டது சரியான முடிவுதான் என பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆட்சியை பிடித்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பல் வேறுநாடுகளிலிருந்தும் கண்டனமும், பல தரப்பட்ட கருத்துக்களும் வெளிவந்தது.
தேச துரோகம், கொலை முயற்சி, ஆள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக நவாஸ் ஷெரீபுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்து வந்தார்
இந்த நிலையில் பாக். டி.வியில் முஷாரப் உரை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது:
நவாஸ் ஷெரீபுக்கு தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கப்பட்டது சவுதி அரேபியாவின் இளவரசரின் ஆலோசனைப்படிதான்.
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் புட்டோவின் மகள் பெனாசிர் புட்டோ வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். ஷெரீப் இப்போது பாகிஸ்தானில் இல்லை.இவர்கள் பிடியிலிருந்து பாகிஸ்தான் வெளிபட்டுள்ளதன் மூலம் பாகிஸ்தானுக்கு நல்ல காலம் வந்துள்ளது.
அரசியலில் ஒற்றுமையும், நன்னம்பிக்கையும் வளர வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
நாட்டு மக்கள் இதை நடுநிலையோடு இதை அணுக வேண்டும். என முஷாரஃப் கூறினார்












Click it and Unblock the Notifications