சண்டை நிறுத்தம்: கிளிண்டன் வரவேற்பு
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சண்டை நிறுத்தம் அடுத்த ஒருமாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதற்கு, அமெரிக்க அதிபர் கிளிண்டன் பாராட்டுதெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம்அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சண்டை நிறுத்தம் அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று புதன்கிழமைலோக்சபாவில் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ஜனவரி 26 ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படும்.அதற்குப்பின் காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் விவாதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
சண்டை நிறுத்த நீட்டிப்பை அதிபர் கிளிண்டன் பாராட்டியுள்ளார். வாஷிங்டனில் இதுகுறித்து அவர்தெரிவிக்கையில், 2000 மாவது ஆண்டு தொடக்கத்தில் நான் இந்தியா சென்றிருந்தேன். அப்போது வாஜ்பாயிடம்காஷ்மீர் பிரச்சனையில் விரைவில் நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
அதன்படி தற்போது ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த இரண்டு மாதத்துடன்முடியாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சனை குறித்து விரைவில்பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் பிரச்சனையில் அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில்தொடங்கும் என்று உலக நாடுகளிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.