ரூ. 27 லட்சம் மோசடி செய்தவர் கைது
கோவை:
சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி, ரூ. 27 லட்ச ரூபாயை செக்கில் எடுத்துக் கொண்டுதலைமறைவான ஊழியரைக் கோவையில் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றிவந்தவர் சசிக்குமார் (28).
நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஊழியராக இருந்தார். இதனால் கம்பெனியின் நிர்வாக இயக்குநர், நிறுவனத்தின்செலவுக்காக தொகை நிரப்பப்படாத, கையெழுத்திட்ட காசோலையைக் கொடுத்தார். பின்னர் அவர்வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிறுவன செக் மூலம் ரூ. 27 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நிர்வாக இயக்குநருக்கு , செக் மோசடி தெரிய வந்தது. இதையடுத்துபோலீசில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாநிலம் முழுவதும் சசிக்குமார் பற்றிய தகவல்களைஅனுப்பினர். அப்போது கோவையில் ஒருவர் லாட்ஜில் தங்கியிருப்பது தெரிய வந்தது. புதிய மாடிஸ் காருடன்அவர் வலம் வந்தது குறித்து அறிந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அவரது காரைப் பறிமுதல் செய்து, அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். அங்கிருந்து ரூ. 18லட்சத்தைக் கைப்பற்றினர். மீதமுள்ள பணத்தை அவர் செலவு செய்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications